Header Ads

  • சற்று முன்

    குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் : பிரபல சாராய வியாபாரி



    கடலூர் மாவட்டத்தில் கடந்த 31.10.18 தேதி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புதுப்பாளையம் புதுத்தெரு , மணலி எஸ்டேட், பாலகிருஷ்ணன் மகன் சரவணன் வயது 47 என்பவர் தனது வீட்டின் தோட்டத்தின் பின்புறம் சுமார் 120 சாராய கேன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணன் மடக்கி பிடித்தும், சாராயத்தை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
    இவர் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையம், மற்றும் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவில் 17 சாராய வழக்குகள் உள்ளன. மேலும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மதுவிலக்கு போக்கிரி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
    இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad