Header Ads

  • சற்று முன்

    தேமுதிக நிர்வாகி இல்ல திருமணவிழாவில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வாழ்த்து



    தேமுதிக சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் G.மகாலட்சுமி  அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழக துணைச்செயலாளர் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திலிருந்து கழக நிர்வாகிகள் புடை சூழ திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க அண்ணாநகர் புறப்பட்டு  திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர். ஏராளமான கழக நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  மற்றும் கழக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்கள்  பரத் - ஜெயஸ்ரீயை வாழ்த்தினர். புதுமண தம்பதிகளாக கரம்பிடித்த இவ்விருவருக்கும் மோதிரம் ஒன்றையும் பரிசாக வழங்கி மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக கழக நிர்வாகி இல்ல திருமணவிழாவில் பங்கேற்க வந்த  கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழக துணைச்செயலாளர் எல்.கே சுதீஷ்  உள்ளிட்ட கழக நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மணமேடையில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு திருமணவீட்டார் மாலை அணிவித்து சிறப்பு சேர்த்தனர். மேலும் அவர்களை வரவேற்கும் விதமாக மத்திய  சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் வழிநெடுகிலும் சாலையில் இருபுறங்களிலும் விளம்பர பதாகைகள் வைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த திருமண வரவேற்பு விழாவில் கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி அவைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் கழக மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், வேளச்சேரி பிரபாகரன், போரூர் ஜெ.தினகர், வி.சி.ஆனந்தன், விசாஹன் ராஜா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad