Header Ads

  • சற்று முன்

    டெங்குவால் தமிழகத்தில் 6 பேர் பலி...



    சேலம்  பள்ளக்காடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது நான்கு வயது மகனான ஸ்ரீசாந்த், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறை எதிரே உள்ள மஞ்சமுத்து என்பவரது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாணவனின் உடல்நிலை நேற்றுமாலை மோசமானது.
    இதையடுத்து சேலம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் சிறுவன் ஸ்ரீசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 மாத கர்ப்பிணி பெண் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். காணம்பட்டியை சேர்ந்த ராமாயி என்ற கர்ப்பிணி பெண் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad