Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்



    கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் ஜெயராஜ் என்பதற்கு சொந்தமான வத்தல் குடோன் மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள தனியார் குடோன் ஆயுளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விளாத்திகுளம்   டிஎஸ்பி தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பான்பராக் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்பி முரளி ரம்பாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் விளாத்திகுளம் டிஎஸ்பி தர்மலிங்கம் தலைமையில், ஆய்வாளர்கள் கலா, செல்வகுமார் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் விளாத்திகுளத்தில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான வத்தல் குடோனில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்பராக் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    மேலும் சித்தவ நாயக்கம்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஆற்றங்கரை பகுதியில் உள்ள ஜெயராஜ்க்கு  சொந்தமான மற்றொரு குடோனில்  போலீசார் சோதனையிட்ட போது அங்கும் மூட்டை மூட்டையாக 14 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு குடோன்களையும்  சேர்த்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன்களின் உரிமையாளர் ஜெயராஜை போலீசார் தேடி வருகின்றனர்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad