வட சென்னையில் 100 கிலோ மாவா கைப்பற்றப்பட்டது
சென்னை வட சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் N. N. கார்டன் தெருவில் வட மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வருகின்றனர். இவர்கள் சட்ட விரோதமான செயலான தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவாவை விற்பனை செய்துவருவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. உடனே H 1 காவல் ஆய்வாளர் ஜாபர் பிட்சன் தலைமையில் சிறப்பு படையினரால் அதிரடியாக சோதனையிட்ட பொது சுமார் 100 கிலோ எடையுள்ள மாவா கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த வீட்டில் குடியிருந்த வடமாநிலத்தவர் இருவரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் - ராஜ் குமார்
செய்தியாளர் - ராஜ் குமார்
கருத்துகள் இல்லை