Header Ads

  • சற்று முன்

    ஓசூரில் திருமணத்திற்கு இரு வீட்டார் எதிர்ப்பு - காதலர்கள் தற்கொலை


    கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே தாவர பத்தம் கிராமத்தில் காதல் திருமணம் செய்துக்கொள்ள இருவீட்டாரும் மறுத்ததால் இளம் காதலர்கள் தூக்கிட்டு தற்க்கொலை செய்துக்கொண்டனர்

    ஹேமந்த்(26),  சூடம்மா (21) இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர், இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த உறவினர்கள் என்றாலும்,
    சூடம்மா பட்டதாறி எனவும், ஹேமந்த் பள்ளி படிப்பை தாண்டாதவர் என்பதால் பெண் வீட்டிலும், முன்விரோதத்தால் ஹேமந்த் வீட்டிலும் திருமணத்திற்க்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால்



    மனமுடைந்த காதலர்கள் இருவரும் கிராமத்தின் அருகில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்க்கொலை செய்துக்கொண்டனர். தூக்கில் தொங்கிய காதலர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தளி காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசார் இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய காதலர்களின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.திருமணத்திற்க்கு மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்க்கொலை செய்துக்கொண்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad