கோவில்பட்டியில் உலக மன நல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உலக மன நலன் நாளையொட்டி கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.
உலக மன நலன் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கையெழுத்து பிரச்சாரம் நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்து கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் பூவேஸ்வரி, மன நல மருத்துவர்கள் சுவாதிலெட்சுமி, நிரஞ்சனா தேவி, மருத்துவர் மோசஸ் பால், ஆக்டிவ் மைண்டல் நிறுவனர் தேன்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை