கோவில்பட்டி பகுதியில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டி மற்றும் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி பஞ்சாயத்து சின்னப்பா நகர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.20 லட்சத்தில் அம்மா பூங்கா, ரூ.5.79 லட்சத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முகசிகாமணி நகர் பகுதியில் ரூ.20.69 லட்சத்தில் அம்மா பூங்கா, ரூ.579 லட்சத்தில் அம்மா பயிற்சி கூடம் ஆகியவை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பரமசிவன்(கோவில்பட்டி), லிங்கராஜ்(கயத்தார்) வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, முருகானந்தம், அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை