Header Ads

  • சற்று முன்

    ஒசூர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாகனம் வழங்கிய நிகழ்ச்சி. அமைச்சர் பங்கேற்றார்.


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் தீயணைப்பு துறைக்கு கூடுதலாக 28 லட்ச மதிப்பிலான புதிய தீயணைப்பு வாகனத்தை வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொண்ட அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தமிழக அரசு சார்பில் வழங்கிய தீயணைப்பு வாகனத்திற்கு பூஜை செய்து துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், பரபகர், ஒசூர் சார் ஆட்சியர் விமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    இதை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
    18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் அதிமுக அரசிற்க்கு வெற்றிக்கிடைத்துள்ளது, டிடிவி ஆதரவாளர்களின் மேல்முறையீட்டால் எவ்வித பாதிப்புமில்லை 20 சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றாலும் அதிமுகவே அமோக வெற்றிப்பெறும், அதற்க்கு அதிமுக தயாராகவே உள்ளது,
    டெங்கு,பன்றிக்காய்ச்சல் உள்ளிட்டவை பரவாதவாறு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,

    அரசு நடவடிக்கை மேற்க்கொண்டாலும், மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டியது அவசியம் என பேசினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad