திருவாடானையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி வேட்டை
திருவாடானை அருகே சீர்தாங்கி கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டுக் கொட்டகையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமநாதபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மதுவிலக்கு போலீசார் மற்றும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 660 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த திருவாடானை அருகே கருமொழி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மணிவண்ணன் வயது 30 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார்
கருத்துகள் இல்லை