கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரிச் செயலர் கே.செல்வராஜ் தலைமை வகித்தார். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சி.பாண்டியம்மாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கல்லூரியில் கணிதம், இயற்பியல், தாவரவியல், வணிகவியல், வேதியியல், கணினி அறிவியல், ஆயத்த ஆடை மற்றும் நுணுக்கவியல், ஆங்கிலம், புள்ளியியல் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற மாணவர், மாணவிகள் என 409 பேருக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார். கணினி அறிவியல் துறை தலைவர் ஜெயபாரதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவில், திருநெல்வேலி மண்டலக் கல்லூரி உதவி இயக்குநர் மயிலம்மாள், கல்லூரி மாணவர், மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை