மர்மமான முறையில் பெண் வெட்டி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நவதி அருகே ரோஸ் கார்டனில் 40 வயது மதிக்கத்தக்க ராணி என்பவர் கணவர் ராஜா, மற்றும் மகளுடன் வசித்து வந்தார்,
ராஜா கட்டுமான மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்., தற்போது அவர் வேலைக்காக மூன்று தினங்களுக்கு முன்பு பெங்களூர் சென்றுவிட்ட நிலையில், நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நவதி, ரோஸ் கார்டனில் மகளுடன் இருந்த ராணி தொலைப்பேசி அழைப்பு வந்தவுடன் பேசியவாறே வெளியே சென்றுவிட்டதால், மகள் உறங்க சென்றுவிட்டார், காலை எழுந்தவுடன் ராணியை தேடிய போது காணாததால், பக்கத்து வீட்டில் பார்க்க சென்றபோது, அப்பகுதியில் ஒருவர் வெட்டப்பட்டு இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர், சென்று பார்த்தபோது சரமாரியாக வெட்டப்பட்டு இறந்த நிலையில் ராணி இருந்ததை பார்த்து கதறி அழுந்தார்,
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஓசூர் நகர போலிசார், . இறந்த ராணியின் உடலை பிணக்கூறாய்விற்க்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
எமது செய்தியாளர் : கிருஷணகிரி - சி. முருகன்
கருத்துகள் இல்லை