Header Ads

  • சற்று முன்

    திருக்கோவிலூரில் குடிசை வீடு எரிந்து தாய் உட்பட 4 பேர் பலி



    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிசை வீட்டில் தீ பற்றி எரிந்ததில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் என 4 பேர் உயிரிழந்தனர்.

    திருக்கோவிலூரை அடுத்த கீழக்குண்டூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன், விழுப்புரத்தில் தங்கி வேலை செய்து வந்தார். அவரது மனைவி தனலட்சுமி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தைகளான கமலேஷ்வரன், விஷ்ணுபிரியன், ருத்ரன் ஆகியோருடன் கீழகுண்டூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் இளங்கோவனின் தந்தை தேனீர் வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது தனலட்சுமி மற்றும் குழந்தைகள் இருந்த வீடு தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தோர் தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் தீ முழுவதும் பரவி வீடு முழுவதும் எரிந்து நாசமானது. தீயில் சிக்கி, தனலட்சுமி மற்றும் 3 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நால்வர் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad