Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே மலையில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை



    கோவில்பட்டி அருகே கழுகுமலையில் மலையில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை ஏபிசி நகரை சேர்ந்த பரமசிவன் மகன் மாரிமுத்து(22). இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த மாரிமுத்து இன்று காலை கழுகுமலையில் உள்ள மலையின் உச்சியின் மேற்கு பகுதிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து கழுகுமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்து உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    செய்திகளை உடனுக்குடன் பார்க்க nms todayபார்க்கவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad