Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது


    திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
    திருவாடானை தாலுகா பண்ணவயலில் திருவாடனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றி கல்வி பற்றி விழிப்புணர்வும், திங்கள் கிழமை மரக்கன்றுகள் நட்டும், துப்புறவு பணியை மேற்கொண்டனர் இந்த முகாமிற்கு தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆணிமுத்து மற்றும் முன்னாள் நல்லாசிரியர்  உதயகுமார் ஆகியோர்கள் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு முகாமை துவக்கி வைத்தனர் முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரஜினி செய்திருந்தார் இந்த முகாமில் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் முதுகலை ஆசிரியர் முத்துராஜ் மற்றும் முனைவர் கருணாகரன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    செய்தியாளர் : ஆனந்தன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad