Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி தபால் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்


    கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் மற்றும் நகராட்சி சார்பில் மக்கும், மக்கா குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்  நடந்தது.இதையொட்டி, வீடுகளில் சேரும் குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் விடுவோம். மக்கா குப்பைகளை சேர்த்து வைத்து நகராட்சியிடம் ஒப்படைப்போம் என்று அஞ்சல் குடியிருப்பில் உள்ளவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



    மேலும் அஞ்சல் அலுவலர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர் உடன் இணைந்து தலைமை அஞ்சல் அலுவலகத்தை சுற்றியுள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்தினர்.இதில் நகராட்சி ஆணையாளர் அச்சையா, அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர், துணை கோட்ட கண்காணிப்பாளர் முருகன், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், சுரேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad