இந்து இஸ்லாமியர் மாத நல்லிணக்கத்தை பாராட்டி காவல்துறை சார்பில் விருந்து உபசரிப்பு
*ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் காவல்துறை சார்பில் இந்து , இஸ்லாமியர் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விருந்து நிகழ்ச்சி*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இஸ்லாமிய பண்டிகையான மொஹரம் பண்டிகை விழா என இரண்டு விழாக்களும் எந்த சிறு பிரச்சினையும் இன்றி பொதுமக்கள் ஆதரவோடு சீறும் சிறப்புமாக நடைபெற்றது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் , மத நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையிலும் இரு மதத்தாருக்கும் இன்று மதியம் 12 மணியளவில் கெலமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் விருந்து அளிக்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்து, இஸ்லாமிய மக்கள் பெருந்திரளாக பங்கேற்கினர். சிறப்பு விருந்தினராக துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் கெலமங்கலம் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்,
மத பிரச்சனைகள் உண்டாகாத வகையில் செயல்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது, பண்டிகளை காலங்களில் சிறப்பான பாதுகாப்பு வசதிகளை ஏற்ப்படுத்தி வரும் காவல்துறையினருக்கு கெலமங்கலம் பகுதி பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்,
காவலர்களும், பொதுமக்களும் நட்புணர்வாக அமைந்த இந்நிகழ்ச்சி உணர்வு பூரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : கிருஷ்ணகிரி - சி. முருகன்
கருத்துகள் இல்லை