என்னைக் கொல்லாதே ..... ஆசிரியர் - நீலம் மூன் இதன் முன் கதை ( 19.09.18 ) பார்க்கவும்
அவங்க கூட கருப்பா கட்டையா வழுக்கு தலையும், முஸ்ஸிம் தாடியும் வைச்ச ஜிப்பாகாரனுடன் பேசனாங்க அப்போ காந்தனுடைய அப்பா கீழேயுள்ள சிட்டவுட்டில் நின்று ஜாடை காட்ட உடனே இருவரும் கிளம்பினர். புதுக்கதையாக இருக்கே அங்கிள் அந்த பெண்ணை பார்த்தாரா ஆச்சரியத்தில் இமைக்க மறந்துவிட்டு நிலாவையே நோக்கினான். கண்டுபிடிக்க வேண்டும். இருவரும் வீடுதிரும்பினர் காந்தனுக்கு நிலாவை அறிமுகப் படுத்தினான், பின்பு மூவரும் பொதுவாக உரையாடினர். இடையே ஆன்டியை பற்றி பேச்சுவார்த்தை வந்ததும்காந்தன் முகமெல்லாம் வேர்வை முத்துகள் கோர்த்தது. ரிலாக்ஸ் காந்தன் உங்களுக்கு எவ்விதமான ஆடசேபனை இல்லை என்றால்அவங்க வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்க்கலாமா என்று அனுமதி கேட்டாள் நிலா.
அதற்கென்ன தாராளமாக பார்க்கலாம். வாங்க என அழைத்தான் நீலேஷ். உடனே மூவரும்தோட்டத்தை வலம் வந்தனர்.நீலேஷ் மாமரத்துக்குப் பின்னாடி மல்லிச் செடி அருகே உற்று கவனிங்களேன். உங்களுக்கு ஏதாவது தென்படுதா. கூர்ந்து கண்ணைத் தேய்த்து ஆராய்ந்தான். நிலா எதுவும் தெரில்லாப்பா என் பக்கமாக வாங்க, இந்த சேத்துல பாருங்க. காந்தனுக்குஎரிச்சல் தாங்க முடியில்ல வேலியில் போற ஓணானை பாக்கெட்டில் விட்டு குத்துதே குடையுதே என்பது போல முன்பின் தெரியாதவளை நிறுத்தி ஆராய்ச்சி வேற சேத்துல மண்ணிருக்கும் தெனாவட்டாக மொழிந்தான்.காந்தன் ஹலோ மிஸ்டர் .....காலடி செப்பல் தெரியுது.
இந்த சைஸ்ல போடுறவங்க இருக்காங்களா வியப்புடன் நோக்கினாள். நார்மலா எட்டு இருக்கும். ஆனால், பத்துக்கும் மேலே காட்டுதே பத்துக்கும் மேலா இருவரும் கோரஸ்ஸாக கேட்டனர். ஆமாம் இந்த வகை செப்பல் தனியாக ஆர்டர் கொடுத்துதான் வாங்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள். யாரேனும் உண்டா. ஒருவரும் கிடையாது. இதை போட்டோ எடுங்க ஒரு நிமிஷம் போலீஸ்சுக்கு தகவல் தருவோமா போச்சுடா சாமி அப்பா கொன்னே புடுவாறு ஆளை விடுங்க என வீட்டை நோக்கி நடந்தான் காந்தன். இருவரும் தயங்கி நிற்க .சிறிய கல் தோளில் பட்டு கீழே விழுந்தது. குனிந்து பார்த்தான் கல்லுடன் காகிதமும் இணைந்து இருந்தது பிரித்தான். துப்பறியும் சிங்கத்துக்கு கத்திக் குத்து காத்திருக்கு......
கருத்துகள் இல்லை