Header Ads

  • சற்று முன்

    *அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்கியவர் கலைஞர், ஓசூரில் நடைப்பெற்ற கலைஞர் புகழ் வணக்க நிகழ்ச்சியில் ஆ.ராசா புகழாரம்*



    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் திருமண மன்டபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட  திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞருக்கு புகழஞ் வணக்க  கூட்டம் நடைப்பெற்றது,

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் கலைஞருக்கு புகழ் வணக்கம் கூட்டம் நடைப்பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு செய்திருந்தார்,


    அதன்படி ஆக்டோபர் 23, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஓசூரில் நடைப்பெற்ற கலைஞர் புகழ் வணக்க நிகழ்ச்சியில், முன்னால் மத்திய அமைச்சரும்,திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா கலந்துக்கொண்டு,
    சாதிகளை அழிக்க தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களை கொண்டு வந்தவர் கலைஞர், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென முதல் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாம செய்த அம்பேத்கரின் கனவை நினைவாக்கி காட்டியவர்  முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி என புகழாராம் சூட்டினார்,


    நிகழ்ச்சியில் சிறப்பாளராக இளசை சுந்தரம் கலந்துக்கொண்டு கலைஞருக்கு புகழ் வணக்க உறையாற்றினார், மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான Y.பிரகாஷ் வரவேற்று பேசினார்,
    வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் உட்பட ஏராளமான திமுகவினர் பங்கேற்று கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர் இறுதியாக ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா நன்றி தெரிவித்தார்.

    செய்தியாளர் : சி. முருகன் - கிருஷ்ணகிரி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad