Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா ஊர்வலம் நடைபெற்றது


    கோவில்பட்டியில் விஸ்வகர்மா சமுதாயம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் விஸ்வகர்மா சமுதாயம் சார்பாக ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம் இந்த விழாவிற்கு தமிழகத்தில் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வது வழக்கம் அதேபோல் இன்று விசுவர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விஸ்வகர்மா பள்ளி முன்பிருந்து விஸ்வகர்மா படத்திற்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அபிN~கங்கள் நடைபெற்றது 



    இதைத்தொடர்ந்து விஸ்வகர்மா பள்ளியின் முன்பிருந்து வானவேடிக்கைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் வைத்து தொழில் செய்பவர்கள் குறித்து சம்பந்தமாக ஊர்வலத்தில் அனைத்து தொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஊர்வலமானது கோவில்பட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர் கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர் விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் செய்துள்ளனர்.

    செய்தியாளர்  : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad