பழனியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையத்தில் பஸ் மறியல் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலையம் முன் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் ராஜமாணிக்கம் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி கண்டன கோஷமிட்டு பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பழனி நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் காவல்துறையினருடன் மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். பழனியில் பந்த் முன்னிட்டு 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு ஒருசில தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கவில்லை பழனியில் 80 சதவீத கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகிறது.
பழனி சரவணக்குமார்...
கருத்துகள் இல்லை