Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் காதை கடித்து துப்பிய  குடிகார ஆசாமி  கந்திலி காவல் துறை விசாரணை.















    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ரவிச்சந்திரன் (23) இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் பவுனு மகன்   முல்லை வேந்தன்(48) இவரும் டிப்பர் லாரி ஓட்டுநராக பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் ரவி புதிதாக வாங்கிய  ஆட்டோவில் அதிக அளவில் சவுண்ட் வைத்து பாட்டு கேட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற முல்லை வேந்தனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவர் கட்டி புரண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த முல்லை வேந்தன் ரவிச்சந்திரனின் இடது காதை கொடுரமாக  கடித்துள்ளார். அதில் இடது காது துண்டானது. இதில் ரவிச்சந்திரன் இரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் ரவிச்சந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவிச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் துண்டு ஆனா காதை இணைக்க முடியவில்லை என டாக்டர்கள் கூறியதை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad