ஓசூர் அருகே பிறந்து சில மணிநேரங்களிலேயே முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தை*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அச்செட்டிப்பள்ளி கிராமத்தில் பிறந்த சிலமணி நேரமே ஆன ஆண்குழந்தையை முட்புதரில் வீசி சென்றுள்ளனர், குழந்தையின் அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர், ஆண் குழந்தையை கைப்பற்றி சுத்தப்படுதினர், தகவல் அறிந்து வந்த மத்திகிரி போலிசார் குழந்தையை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
பிறந்த சில மணிநேரங்களில் ஆண்குழந்தையை வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
எமது செய்தியாளர் : ஓசூர் முருகன் - சி.
கருத்துகள் இல்லை