ஆக்கிரமிப்பு இடங்களை முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற குடும்பம்
வேலூர் அருகே தன் வீட்டை முன்னறிவிப்பு இன்றி இடித்து தரைமட்டமாக்கியது கண்டித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி மற்றும் சாலை மறியல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடி குளக்கரைரை பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் நீர்நிலை அருகே வீட்டு கட்டி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருக்கும் நபர்கள் அனைவரும் கூலித்தொழிலாளி ஆவார். இந்நிலையில் திடீரென காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் துணையுடன் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை இடித்து தள்ளினார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் தீடீரென வருவாய் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதிலீ ஆவேசம் அடைந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீடீரென காட்பாடி- திருவலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். அப்போது தீடீரென மண்ணெண்ணெயை கேனை எடுத்து தீ குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் - சரவணன்
கருத்துகள் இல்லை