காரைக்குடி பேருந்து நிலைய வாகன நிறுத்தமா ? சமூக விரோதிகளின் கூடாரமா ?
காரைக்குடி பேருந்து நிலையத்தில் புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிடப்பட்டு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பணிகள் நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு வராததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் நீண்ட நாட்களாக திறக்கப்படாததால், இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இந்த வாகன நிறுத்தத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது செய்தியாளர் - காரைக்குடி - A . R. சண்முக சுந்தரம்
எமது செய்தியாளர் - காரைக்குடி - A . R. சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை