முத்ரா திட்டத்தில் ் கடன் பெற்று தருவதாக இரண்டு பேர் நூதன முறையில் மோசடி
திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை கீழக்கோட்டை உட்பட பல கிராமங்களில் பெண் உட்பட 2 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவதாகவும் முத்ரா திட்டத்தில் கடன் பெற்று தருவதாகவும் கிராம பொது மக்களிடமும் அதிலும் குறிப்பாக பெண்களிடம் கூறி ரூபாய் 100 முதல் 200 வரை பணம் வசூல் செய்து விட்டு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர் இது பற்றிய தகவல் பிஜேபி கட்சியினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தினர் விசாரணையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முத்து வயல்கிராமத்தைச் சேர்ந்த முருகபூபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரும் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி வசூல் செய்தது தெரியவந்தது அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தன
கருத்துகள் இல்லை