திருமங்கலம் அருகே வெறிநாய் கடித்து நான்கு வயது மான் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் காட்டுப் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 4 வயது மான் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளது தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து இப்பகுதியில் வெறிநாய் கடித்து மான் பலியாகுவதால் இப்பகுதியில் வனச்சரகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் நேசநேரி சிவரக்கோட்டை பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட மான்கள் இருக்கின்றன ராயபாளையம் பகுதியில் தண்ணீர் பருகுவதற்காக இப்பகுதிக்கு வந்து செல்லும் இந்நிலையில் ராயபாளையம் அய்யனார் கோவில் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் வெறி நாய்கள் கடித்து நான்கு வயது பலியாகியுள்ளது காலையில் ஆடு மேய்க்கச் சென்ற சிலர் மான் இறந்து கிடந்ததை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு உசிலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்
திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் அரியவகை மான் பன்றி மயில் முயல்கள் அதிகளவில் இருப்பதால் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
செய்தியாளர் : நீதி ராஜா பாண்டிய ராஜன்
watch nms today youtube channel and subscribe the channel
கருத்துகள் இல்லை