காட்பாடியில் பட்ட பகலில் இருச்சக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபரை துவைத்து எடுத்த பொதுமக்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருச்சக்கர வாகனத்தை திருடமுயன்ற வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து அவனை கை கால்களை கட்டி போட்டு பொதுமக்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொது மக்களிடம் இருந்து அந்த திருடனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருடா வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் காட்பாடி- வேலூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள் இல்லை