Header Ads

  • சற்று முன்

    நாட்றம்பள்ளி அருகே வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்!.


    வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி, தாமலேரிமுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை-  பெங்களூர் வரை செல்லும்  ரயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா அரிசியை  கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி  சாலை ஓரம்   பதுக்கி வைத்திருந்த  சுமார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி போன்ற பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி தினந்தோறும் அன்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு கடத்தப்படுகிறது. வட்ட வழங்கல் துறை அதிகாரிகளின் கவன குறைவான பணி மூலமே இது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad