Header Ads

  • சற்று முன்

    மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான கடற்கறை கையுந்தப் போட்டி



    3-9-2018-அன்றுகொள்ளிடம் ஒன்றியம்,மாதிரவேளூர் முத்துசாமி விசுவநாதன்  உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது .இப்போட்டியை முத்துசாமி விசுவநாதன் உயர்நிலைப்பள்ளி செயலர்  திருமதி.மாலா செல்வராகவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.மயிலாடுதுரை கல்வி மாவட்டத்தில் உள்ள  அனைத்து உடற்க்கல்வி ஆசிரியர்கள் ,உடற்கல்வி இயக்குனர்கள், மற்றும் ,போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர.இப்போட்டியின் சிறப்பு விருந்தினராக சீர்காழி குட் சமாரீட்டின் பப்ளிக் பள்ளியின் இயக்குனர் திரு.பிரவீன் அவர்களும்,கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளியின் இயக்குனர் திரு.வம்சி அவர்களும் கலந்துக்கொண்டனர். இப்போட்டியில் முத்து சாமி விசுவநாதன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பெண்கள் பிரிவில் பதினாங்கு வயதிற்குட்பட்ட  பிரிவில் முதலிடத்தையும், அதே பிரிவில் ஆண்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். முத்துசாமி விசுவநாதன் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. குமார் அவர்களும் கொள்ளிடம் முன்னால் ஒன்றியக் குழுத்துணை த்தலைவர் திரு.பாலதண்டாயுதம் அவர்களும்  மாதிரவேளுர் கூட்டுறவு சங்க தலைவர் திரு.அருண் அவர்களும் முத்துசாமி விசுவநாதன் உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்திரு.மகாலிங்கம் அவர்களும், போட்டியில் வெற்றிப் பெற்றவர்க்கு,பரிசுகள் வழங்கினர்.முத்துசாமி விசுவநாதன் உயர்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.இளையராஜா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad