*ஓசூரில் உலக இதய தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனையினர் மற்றும் போலிசார் இனைந்து நடத்திய தலைகவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன பேரணி*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அக்டோபர் 29 உலக இருதய தினத்தை முன்னிட்டு தலைகவசம் அணிவதன் குறித்த இருசக்கர வாகன பேரணி நடைப்பெற்றது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் வழிகாட்டுதல்படி, ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி அவர்கள் இருசக்கர வாகன பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார், வாகன விபத்துக்களை தவிர்க்க, இதயத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்வது குறித்து கைகளில் பதாகைகளை ஏந்தி,
ஓசூர் தனியார் மருத்துவமனையினரும், ஓசூர் போலிசாரும் 100 க்கும் அதிகமானோர் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனங்களிர் பேரணியாக சென்றனர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய பேரணி ஓசூரின் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.
கருத்துகள் இல்லை