Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கிய உயிரிழந்தவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை


    கோவில்பட்டி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் காசிராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின்வயரை பிடித்தவாறு உயிரிழந்து கிடந்த அடையாளம் தெரியாத 45வயது மதிக்கதக்க ஆண் சடலைத்தினை மேற்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் யார் ? என்ற விபரம் தெரியவில்லை, மின்மோட்டர், வயர்களை திருட வந்த போது மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வெங்கடாசலபுரம் - ஆண்டிப்பட்டிக்கு இடையில் உள்ள காட்டுபகுதியில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றும் உள்ளது. அந்த தோட்டத்திற்கு அருகில் மின்வயர் உடலில் கிடந்த படி சுமார் 45வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளது. அப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்றவர்கள் இதனை பார்த்து, தோட்டத்தின் உரிமையாளருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

    இதனை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்;ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை, இந்த பகுதியில் அடிக்கடி மின்சார வயர்கள் திருட்டுகள் நடைபெற்றுள்ளதால், சடலமாக கிடந்த மின்வயர் திருட வந்து, மின்சாரம் தாக்கி இருந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad