Header Ads

  • சற்று முன்

    தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் - சென்னையில் திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

    இந்நிகழ்ச்சியில் வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வெற்றிவேல், வடசென்னை தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன், தென்சென்னை வடக்‍கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.வி.பி.கலைராஜன், தென்சென்னை தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு. செந்தமிழன், கழக அமைப்புச் செயலாளர் திரு.சுகுமார் பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    தந்தை பெரியார் சிலையை அவமதித்து தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்‍கும் சக்‍திகளை முறியடிக்‍க வேண்டும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில், தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்‍கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. டிடிவி தினகரன், அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தை சிலர் கலவர பூமியாக மாற்ற முயற்சிப்பதை முறியடிக்‍க வேண்டும் என்றும், மதவெறியை தூண்டுபவர்களுக்‍கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் குறிப்பிட்டார். இந்து மதத்தைக்‍ காப்பாற்றுபவர்போல் எண்ணி, மனநோயாளிபோல் ஹெச்.ராஜா செயல்படுவதாக திரு. டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.


    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad