Header Ads

  • சற்று முன்

    ரயில் முன் விழுந்து கூலி தொழிலாளி தற்கொலை



    ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கூலித்தொழிலாளி தற்கொலை உடல் துண்டு துண்டானது ரயில் போலீஸார் விசாரணை.


    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஆக்கரவரம் மலையன் வட்டம்  பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் பெருமாள் (36) கூலித்தொழிலாளியான இவருக்கும் வீட்டில் உள்ள சக உறுப்பினர்கள் இடையே சொத்து தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் மீண்டும் சொத்து தகராறு பிரச்சினை ஏற்பட்டது. 


    அப்போது மனவேதனையில் இருந்த பெருமாள் நாட்டறம்பள்ளி அடுத்த கே. பத்தராப்பள்ளி அருகே ரயில்வே கேட் அருகே சென்னை இருந்து பெங்களூரு வரை செல்லும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டு துண்டாக சிதறி கிடைத்தது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் சிதறி கிடைத்த உடல் உறுப்புகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    செய்தியாளர் : வேலூர் - சரவணன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad