Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடியில் பெந்தேகோஸ்தே சபையில் இளம் கன்னியாஸ்திரி மர்மமான முறையில் மரணம்

    சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகள் நித்யா (23),  இவர் தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள "தி பெந்தேகோஸ்தே சபை"-யில் தங்கி ஊழியம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று அவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.  அவரது உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கன்னியாஸ்திரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளதால் சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். 

    மேலும், கன்னியாஸ்திரியின் மரணம் சபை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெந்தேகோஸ்தே சபையில், மூத்த கன்னியாஸ்திரிகளின் டார்ச்சர் இருந்ததாவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நித்யாவிற்கு காயம் ஏற்பட்டதாகவும், அவருக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும், இதனால் அவர் நேற்று மாலை உயிரிழந்து விட்டதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் இளைய கன்னியாஸ்திரி மீது வெந்நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    இதே சபையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களாபுரத்தை சேர்ந்த போதகர் கனகராஜ் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் மர்மமான முறையில் இறந்தார் என்பது குறிப்பிடதக்கது. தூத்துக்குடி பெந்தேகோஸ்தே சபையில், இளம் கன்னியாஸ்திரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad