Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் கள்ளக் காதலியை கொன்ற கள்ளக் காதலன்



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  அடுத்த மீட்டூர்  ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி சுதா(35) மகன் கவிதா(07) இவரும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதா அதே பகுதியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியை டெய்லர் வேலை செய்யும் சதீஷ் (35) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்றப்பட்டு அது நாள் அடைவில்   கள்ளகாதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று இரவு கள்ள காதலர்கள்  இருவரும் மீண்டும் தனிமையில் இருந்துள்ளனர். 


    இப்போது இவருக்கும் இடையே வாய் சண்டை ஏற்றப்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த கள்ள காதலன் சதீஷ் சுதாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த சதீஷ் சுதா உடலையை மறைக்க அருகில் உள்ள ஆற்று ஓடையில் குழி தோண்டி புதைத்துவிட்டு சுதா கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையும் மற்றும் அரிசி முட்டைகளை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் வீசி விட்டு அங்கு இருந்து தப்பி உள்ளார். அதன்‌ பின்னர்‌  தீடீரென இரவு இரவு முழுவதும் வீட்டில் இருந்த சதீஷ் மனமாற்றம் மாறி குருசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்று நடத்த சம்பவங்களை கூறி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதன்பின் சதிஷ் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சுதா உடலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    செய்தியாளர் - வேலூர் - அக்னி புயல் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad