Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே பாலத்தில் கார் மோதி இருவர் பலி


    கோவில்பட்டி அருகே விளாத்திகுளம்  பாலத்தில் கார் மோதி விபத்தில் இருவர் பலியாகினர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம்  மீனாட்சிபுரத்தை சேர்ந்த சோலைமுத்து மகன் ஆறுமுகம் (37). இவர் விளாத்திகுளத்தில் மோட்டார் வாகனங்களுக்கு எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.இவர் தனது மனைவி மாரிச்செல்வி (28) மற்றும் குழந்தைகள் குடும்பத்தினருடன் இன்று இருக்கன்குடி சாமி தரிசனம் செய்ய சென்றார்.

    பின்னர் மாலையில் அனைவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதில், ஆறுமுகம் மாரிச்செல்வி, குழந்தைகள், மீனாட்சிபுரத்தை சேர்ந்த கிராம பெருமாள் மகன் அழகுமுத்து(40), முருகேசன்(35), கன்னியம்மாள்(52) ஆகியோர் காரிலும் மற்றவர்கள் வேனிலும் வந்து கொண்டிருந்தனர்.

    விளாத்திகுளம்  உள்ள தனியார் ஆலை பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பாலத்தின் கைப்பிடி சுவரில் மோதியது.
    இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் மற்றும் அழகு முத்து ஆகியோர் பலியாகினர்.மாரிச்செல்வி, கன்னியம்மாள், முருகேசன் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விளாத்திகுளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


    எமது செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube chennal பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad