Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் சந்தா நகர் பகுதியில் உள்ள நீர்நிலை தொட்டியில் இளைஞர் தூக்கிட்டு மரணம்



    திருப்பத்தூர் சாந்த நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35)  இவர் லாரி கிளீனராக பணியாற்றி வந்துள்ளர். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தன்னை சிலர் கொலை செய்வதற்காக தேடி வருவதாக கூறியுள்ளார். மது பழக்கதிற்கு அடிமையானதால் அவர் கூறியதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் இன்று அதிகாலை வள்ளலார் நகரில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் கயிற்றில் தொங்கிய நிலையில்  சுரேஷ்  உடல் இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  மேலும் கொலையா தற்கொலையா என காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர் : அக்னி புயல் - வேலூர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad