பழனி மலைக்கோவிலில் நீதிபதிகள் திடீர் ஆய்வு
பழனியில் இரண்டாம் கட்டமாக நீதிபதிகள் தலைமையில் மலைக்கோயில் தங்கதொட்டில்,தங்க கோபுரம், உணவுக்கூடம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் மற்றும் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.நம்பி தலைமையில் மலைக்கோயில் தங்க கோபுரம், கட்டளை சீட்டுக்கள்,நிரந்தர கட்டளைதாரர்களின் வருமான அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் மற்றும் தரிசன கட்டண விபரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
செய்தியாளர்
பழனி சரவணக்குமார்...
கருத்துகள் இல்லை