Header Ads

  • சற்று முன்

    புளியம்பட்டி அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை


    புளியம்பட்டி அருகே அக்கநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த செல்லமணி மகன் உதயகுமார்(29). இவர் அக்கநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே இறைச்சி கடை மற்றும் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். 

    இவருக்கு மாஷாதேவி(25) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த குழந்தை உதயகுமாருடன் வசித்து வந்தது. மாஷாதேவி தனது 2வது குழந்தையுடன் கோவில்பட்டி  அருகே மந்தித்தோப்பில் தனது தாயுடன் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் நேற்று இரவு உதயகுமார் உணவகத்தை மூடிவிட்டு, வழக்கம்போல் வெளியே படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலையில் பார்த்தபோது சரமாரி வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உதயகுமார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாஷாதேவியும், அவரது தாயும் அக்கநாயக்கன்
    பட்டிக்கு வந்து மூத்த குழந்தையை கேட்டு உதயகுமாருடன் தகராறு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், உதயகுமார் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதுவும் காரணமா என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad