Header Ads

  • சற்று முன்

    சென்னை ஆட்டோ ஓட்டுனருக்கு போக்சோ சட்டம் பாய்ந்தது



    சென்னை திருமங்கலத்தில் 12  வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம்  அடைய செய்த ஆட்டோ டிரைவர் ரவி என்கிற பெருமாள் வயது (37) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    பாடி புது நகர் 4 வது தெரு பகுதியைச் சேர்ந்த எட்டாம்வகுப்பு மாணவி மாலதி வ (13) பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தந்தையை பிரிந்து வாழும் இவரது தாயார் நகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று  அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்துப் சென்று மருத்துவர்கள் சோதித்ததில் அப்பெண் ஒன்பது மாத கர்ப்பம் என்று தெரியவந்தது. சிறுமியின் தாயார் திருமங்கலம் மகளிர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

    மேற்கொண்டு போலீசார் விசாரித்ததில் பாடி புதுநகர் 3 வது தெருவில்  வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் 
    ரவி என்கிற பெருமாள் வ(37) வாலிபன் சிறுமியை பலமுறை மிரட்டி உறவுமேற்கொண்டுள்ளான் என்பது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து அவனை கைது செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டதில்  அவனுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும்,  வீட்டின் அருகே விளையாட வரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததை ஒப்புகொண்டுள்ளான். இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் : கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad