Header Ads

  • சற்று முன்

    . பழனியில் தனியார் பிளாஸ்டிக் கடையில் ரூ.50,000 திருட்டு


    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பாத்திமா ஸ்டோர் என்ற பிளாஸ்டிக் கடையில் இருந்து  ரூபாய் 50,000 பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.



    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் உள்ளது மாரியம்மன் கோயில் அருகே பாத்திமா ஸ்டோர் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இதன் உரிமையாளர் காஜா மைதீன்.  இவர் நேற்று இரவு வழக்கம் போல்  கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வழக்கம்போல் காலையில் வந்து  கடையை திறந்தவுடன் கல்லா உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட  காஜா மைதீன் அதிர்ச்சி அடைந்தார் திருடன் மேலே ஏறி இறங்கிய போது தகரம் கிழித்து கடையின் உள்ளே நடந்து வரும் போது ரத்தங்கள் காணப்பட்டுள்ளது.மேலும் அவன் நடந்து வந்த கட்சிகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது.அதனை ஆதாரமாக வைத்து பழனி நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது கடையில் கல்லா உடைக்கப்பட்டுக் கிடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைத்து விட்டு சென்ற 50,000 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. பழனி நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad