Header Ads

  • சற்று முன்

    பழனியில் திராவிடர் கழகம் சார்பில் 140 வது பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது...


    பழனியில் திராவிடர் கழகம்  சார்பாக புத்துலக தொலை நோக்காளர் பெரியாரின் 140 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் தந்தை பெரியார் பட பதாகையை ஏந்தி அனைத்து கட்சிகள் கலந்து கொண்டு பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு பெரியார் சிலை வரை ஊர்வலமாக பெரியாரின் புகழ்பாடும் பல்வேறு கோசங்களை எழுப்பிக்கொண்டு நடந்து சென்றனர்.


    அங்கு அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு ஒவ்வொரு கட்சிகளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் இறுதியாக திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து கோசங்களை எழுப்பி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    இந்நிகழ்வில் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் புலிகள்,திராவிட மறுமலர்சி கழகம்,இந்திய காங்கிரஸ் கட்சி,இந்திய குடியரசு கட்சி,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad