தினகரன் அணி ஊத்தங்கரையில் அண்ணாவின் 110 வது பிறந்தநாள் விழாவில் பிரியாணி பொட்டலம்,பணம் பட்டுவாடா ஜோர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவுரையின்படி பேரறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நா.கோ.இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர்,மண்டலப் பொருளாளர் பி.பழனியப்பன் பேசுகையில் அண்ணா வின் வழியில் தோன்றிய திராவிடம் இன்று அண்ணண் தினகரனிடம் உள்ளதாகவும் அதன் சாட்சியாக அனைத்து கூட்டத்திற்க்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் ஆர்வமும் ஈடுபாடுடனும் கலந்து கொள்வது தெரிவதாக கூறினார். நிகழ்ச்சியில் அன்பாக வந்த கூட்டம் என கூறிய பழனியப்பன். அதேநேரத்தில் மேடையின் பின்புறம் பணம் பட்டுவாடா பிரியாணி. பொட்டலம் அளித்து கூட்டத்தை கூட்டிவந்துள்ளது போல் அருகே இருந்த எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் பட்டுவாடா செய்து பெயர் பட்டியல் எடுத்ததும் பெண்கள் பணத்திற்க்கா காத்திருந்ததும் வழக்கம்போல் அனைத்துக்கட்சி கூட்டம் போல்தான் இந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியும் என நொந்து சென்ற பொதுமக்கள்
செய்தியாளர் : மணிகண்டன்
கருத்துகள் இல்லை