வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் யூனியனுக்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி பட்டன் வட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை. இதுகுறித்து பல முறை அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறிவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு ஆலங்காயம்-வாணியம்பாடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அதன் வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி மற்றும் அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு மின் மோட்டார் உடனே சீரமைக்கப்பட்டு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் - சரவணன்
கருத்துகள் இல்லை