Header Ads

  • சற்று முன்

    ஜோலார்பேட்டை அருகே கூலித்தொழிலாளியை வெட்டிய நபர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.


    வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை அருகே உள்ள  கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (38) கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கும்  அதே பகுதியைச்  சேர்ந்த குமார் (எ) ராமசாமி, சுகுமார், கோபால், கஸ்தூரி ஆகியோர் இடையே கடந்த இரண்டு வருடங்களாக நில பிரச்சினை இருந்துள்ளது. 


    இந்நிலையில் ராமசாமி தரப்பினர் தீடீரென  ஜெயராமன் வீட்டிற்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராமசாமி தரப்பினர் தாங்கள் மறைந்து வைத்து இருந்த ஆயுதங்களால் தீடீரென ஜெயராமனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஜெயராமன் தலையில் பலத்த காயம்  ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜெயராமனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


    செய்தியாளர்  : வேலூர் - சரவணன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad