ஓசூர் நகராட்சியின் அலட்சிய போக்கு தொற்று நோய் பரவும் அபாயம் மக்கள் பீதி !!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலைய சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் கழிவு நீர் கலந்த குடி நீர் வருவதாக கூறி பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி போலீசார் சமரசம் செய்தனர்.
ஓசூர் ரயில்நிலைய சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடி நீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இது குறித்து பல முறை நகராட்சிக்கு தெரியபடத்தியும் நகராட்சி கண்டு கொள்ளவில்லை. அதனால் இன்று 100 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியினர். சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகர போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஒரு சில நாட்களுக்குள் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதியளித்தன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : கிருஷ்ணகிரி - முருகன் .சி
கருத்துகள் இல்லை