Header Ads

  • சற்று முன்

    ஆர்.கே.நகரில் ஏமாந்தோம் - திருபரங்குன்றத்தில் ஏமாறமாட்டோம் - ஆர்.பி. உதயகுமார்


    ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் புதிது என்பதால் ஏமாந்து விட்டோம் – திருப்பரங்குன்றத்தில் ஏமாற மாட்டோம் – அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
    மதுரை திருமங்கலம் அருகே பேரையூரில் அண்மையில் உயிரிழந்த நலிலடைந்த அதிமுக தொண்டர்களின் குடும்பத்திற்கு நிதி உதவிகளை வழங்கி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம் சிலர் எந்த சாதனையும் செய்யாமல் நாங்கள் தான் ஜெயிப்போம்  என்று சொல்பவர்கள் களமே தெரியாமல் கத்துவதற்கு சமம். ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவருடைய பெயரை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கட்சியும் சின்னமும் எங்களிடத்தில் இருப்பதால் ஜெயலலிதாவின் செல்வாக்கை நிரூபிக்கும் தகுதி எங்களுக்கு மட்டுமே உள்ளது.மதுரை விமான நிலையத்தில் அம்முக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் திருப்பரங்குன்றம் ஜெயலலிதாவின் கோட்டை என்ற பேச்சுக்கு அமைச்சர் உதயக்குமார் பதில் .எந்த அணியும் பிரியவில்லை ஒன்று சேர்ந்த அதிமுகவைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.தமிழக முதல்வர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். ஆனால் மக்கள் பணி என்று சொல்பவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லவில்லை.ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் புதிதாக இருந்ததால் நாங்கள் ஏமாந்து விட்டோம். 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதுபோல திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற முடியாது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad