டெம்போ டிரவெலர் மீது லாரி மோதி விபத்து
ஓசூர் பேராண்டப்பள்ளியில் விபத்து, இதில் பயணம் செய்த 10 திற்க்கும் மேற்ப்பட்டோர்கள் படுகாயம், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதி
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற டெம்போ ட்ராவலர் ஒன்று சென்று கொண்டிருந்தது அந்த டெம்போ ட்ராவலர் 10 க்கும் மேற்ப்பட்டோர் பயணம் செய்தனர் இவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்,
கேரளாவில் இருந்து பெங்களூர் நெலமங்கலம் அருகே உள்ள நாகர்பாவி என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது லாரி ஒன்று இவர்கள் வந்த டெம்போ ட்ராவலர் மீது மோதியது வாகனத்தில் இருந்த மார்டின் (74) மேரி (65) ஜோசப் (72) டிரிஷா (65),டிரைவர் கங்காதர் வயசு (25),உள்ளிட்ட 10 ,பேர் பலத்த காயங்கள் ஏர்ப்பட்டன,,
காயம் கொண்ட அனைவரையும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை