Header Ads

  • சற்று முன்

    இடி தாக்கி சம்பவ இடத்திலே பலி திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை



    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரம் நான்குவழிச்சாலையில் சென்னையை சேர்ந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


    திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து இரண்டும் மணி  நேரம் கன மழை பெய்து வந்தது அப்பொழுது சென்னை பட்டாபிராம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஆனந்த் குமார் (33) இவர் பில்டிங் காண்ட்ராக்டர் ஆக உள்ளார் இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரம் நான்குவழிச் சாலை அருகே வரும்போது தொடர்ந்து 2 மணி நேரம் மழை பெய்து கொண்டிருந்தது அப்பொழுது திடீரென இடி விழுந்ததில் தலைக்கவசம் சுக்கு நூறாக சிதறி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார் அப்போது அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இடி தாக்கி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad